சனி, 6 ஆகஸ்ட், 2011

மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்

தோன்றல் மூன்று
பாவாணரின் பெருமைகளும் பட்டங்களும்
   தேவநேயப் பாவாணர் நூலகம் சென்னை அண்ணாசாலையில் இயங்கி வருகிறது. இராசபாளையத்திற்கு அண்மையிலுள்ள முறம்பில் இவரது நினைவாக பாவாணர் கோட்டம், முழுவுருவச் சிலை. நூலகம் ஆகியவை அமைக்கப்பெற்று பாவாணர் புகழ் பேசும் மையமாக விளங்குகிறது. தமிழக அரசு வழங்கிய 'செந்தமிழ்ச் செல்வர்', குன்றக்குடி அடிகளார் வழங்கிய 'செந்தமிழ் ஞாயிறு', மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் வழங்கிய 'தமிழ்ப் பெருங்காவலர்', தென்மொழி வழங்கிய 'மொழி ஞாயிறு' போன்ற பட்டங்களும், ௧௭௪(174) சிறப்புப் பெயர்களும் இவருக்கு உண்டு.
வாழ்கை நிகழ்வு
   ஒருமுறைப் பாவாணர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, மிதிவண்டியோட்டி ஒருவர் இவர்மீது மோதினார். பாவாணருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. மிதிவண்டியோட்டி, "ஐயா மன்னித்துக் கொள்க" என்றார். "மன்னிப்பு உருதுச் சொல், 'பொறுத்துக் கொள்க' என்று தமிழில் சொல்லுங்கள்" என்றார். பாவாணர். அவரும் அவ்வாறே சொல்ல, "போம், பொறுத்தோம்" என்றார், பாவாணர். இடர்பட்டபோதிலும் சொல்லஆய்வை இமைப்பொழுதிலும் மறக்காத விந்தை மாந்தரே பாவாணர்.
இயற்கையோடு இணைந்தார்
   ௦௫.௦௧.௧௯௮௧ அன்று (05.01.1981) மதுரையில் நடைபெற்ற  உலகத் தமிழ் மாநாட்டின்போது 'மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்" என்னுந்தலைப்பில் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார். அப்போது நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ௧௫.௦௧.௧௯௮௧ அன்று(15.01.1981) இரவு ௧௨.௩௦ மணியளவில்(12.30) இயற்கை எய்தினார்.
பாவாணரே பேசுகிறார் 
   "தமிழர் தொன்மையை உலகிற்கு அளித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழுக்கு வித்திட்டுச்  தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலை அடிகள்: நானே மரமாக வளர்ந்து வருகிறேன்" என்பார் பாவாணர். இது உண்மை: வெறும் புகழ்ச்சிஇல்லை.

1 கருத்து: